முதல் ஆளாக ஓட்டு போட்டவர் மரணம்.. சற்று நேரத்தில் பிரிந்த இன்னொரு உயிர்.. சோகத்தில் மூழ்கிய கேரளா

x

கேரள மாநிலம் பாலக்காடு, மலப்புரத்தில் வாக்களித்து விட்டு திரும்பிய இரு முதியவர்கள் திடீரென மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... ஓட்டப்பாலத்தில் வாணி விலாசினியை சேர்ந்த சந்திரன் வரிசையில் நின்று வாக்களித்து விட்டு வீடு திரும்பி வரும்போது மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. அதேபோல் வாக்களித்து விட்டு வீடு திரும்பிய நிறைமருதூரைச் சேர்ந்த 65 வயது சித்தீக் மவுலவியும் மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார்... இவர் நிறைமரத்தூர் வல்லிகாஞ்சிரம் பள்ளிச் சாவடியில் முதல் ஆளாக வாக்களித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்