"கேரள அரசு சபரிமலை பக்தர்களுக்கு எந்த வசதியும் செய்யவில்லை" - எல்.முருகன் கடும் குற்றச்சாட்டு

x

கேரள அரசு சபரிமலை பக்தர்களுக்கு எந்த வசதியும் செய்யவில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் 'அகண்ட தமிழ் உலகம்' அமைப்பின் நான்காவது சர்வதேச மாநாடு நிறைவு விழாவில் அவர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், சபரிமலையில் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பிடம் என எந்த வசதிகளையும் கேரள அரசு செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும், பக்தர்கள் ஏன் வருகிறார்கள் என்ற மனப்பான்மையில் கேரள அரசு நடப்பதாகவும் வேதனை தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்