ஆளுநர் போகும் இடமெல்லாம் அதிர்ச்சி கொடுத்த SFI அமைப்பினர் - நள்ளிரவில் திடீர் பரபரப்பு

x

கேரளாவில் ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கு எஸ்.எஃப்.ஐ அமைப்பினர் கருப்பு கொடி காட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலத்தில் சமீப நாள்களாக ஆளுநர் செல்லும் இடங்களில் எஸ்.எஃப்.ஐ அமைப்பினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல், கண்ணூர் மாவட்டம் மட்டனூர் பகுதிக்கு வருகை தந்த ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் சலசலப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்