பச்சிளம் குழந்தையை வீசி சென்ற இளம்பெண் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

x

கேரளாவில் பச்சிளம் குழந்தையின் சடலம் பொட்டலமாக தூக்கி வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக இளம்பெண் மற்றும் பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொச்சியின் பனம்பில்லி நகர் பகுதியில் பச்சிளம் குழந்தையின் சடலம் பொட்டலமாக கட்டி சாலையில் வீடப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்த போது பிறந்து 2 நாட்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் மாடியிலிருந்து பொட்டலம் தூக்கி வீசப்படும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு தளத்தில் வசிக்கும் திருமணம் ஆகாத பெண் , அவரது பெற்றோரை போலீசார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்பெண்ணின் வீட்டு குளியல் அறையில் ரத்தக்கறை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது . திருமணம் ஆகாத இளம்பெண்ணுக்கு பிறந்த குழந்தை கொல்லப்பட்டு வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துளது.


Next Story

மேலும் செய்திகள்