"எந்த அதிகார பதவியும் சட்டத்திற்கு மேலானது அல்ல"...கேரள முதல்வர் கண்டிப்பு

x

எந்த அதிகார பதவியும் சட்டத்திற்கு மேலானது அல்ல என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், கேரள அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், நேற்று கொல்லம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற ஆளுநருக்கு இந்திய மாணவர்கள் சங்கத்தினர் கருப்பு கொடி காட்டினர். இதனால் அதிருப்தியடைந்த ஆளுநர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதனையடுத்து, ஆளுநருக்கு எதிராக நடைபெற்ற வன்முறை குறித்து மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது. இந்நிலையில், எந்த அதிகார பதவியும் சட்டத்திற்கு மேலானது அல்ல என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்