நள்ளிரவில் வந்த போன் கால்... கர்நாடக ஆளுநர் மாளிகையில் அதிரடி சோதனை

x

கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்று நள்ளிரவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட மர்ம நபர், ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளனர். உடனடியாக ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் அபாயம் விளைவிக்கும் வகையிலான எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்