ஆளுநர் உரை முடிந்ததும் கர்நாடக சட்டப்பேரவை அதிர ஒலித்த கோஷம்

x

திருக்கோவிலூர் அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சிலை திறப்பு, தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேமுதிக கொடி நாளையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் கனகனந்தல் கிராமத்தில், தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் மார்பளவு சிலையை திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிலையை திறப்பதற்காக முன்னாள் எம்.எல்.ஏ எல்.வெங்கடேசன் வந்த நிலையில், சிலை திறப்பதற்கு உரிய அனுமதி பெறவில்லை என கூறி, அவரை வருவாய் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் வெங்கடேசன், தேமுதிக கொடியை மட்டும் ஏற்றி விட்டு அங்கிருந்து புறப்பட்டார். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்