பாஜகவிற்கு தலைவலியாக மாறிய ஆபாச வீடியோக்கள்... சிக்கலில் தேவே கவுடா மகன், பேரன்... கர்நாடக அரசியலில் வெடித்த எரிமலை

x

பாலியல் புகாரில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தை ரேவண்ணா மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரஜ்வல் ரேவண்ணா, மீண்டும் ஹாசன் தொகுதியில் களம் இறங்கியுள்ள நிலையில், அவர் பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. வீடியோவில் இருந்த பெண்கள் அனைவரும் உதவி கேட்டு அணுகியவர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின்படி, பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை சிறப்பு தணிக்கை குழு விசாரணை செய்ய கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், 47 வயது பெண் ஒருவர், பிரஜ்வல் ரேவண்ணா மீதும், அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா மீதும் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பிரஜ்வல் ரேவண்ணா, தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தமது மகளுக்கு ஆபாச அழைப்புகள் செய்வதாகவும் புகாரில் கூறியுள்ளார். அதனடிப்படையில், பிரஜ்வல் ரேவண்ணா மீதும், அவரது தந்தை மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனிடையே, என்டிஏ வேட்பாளர் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் குறித்து, பிரதமரும், எச்டி குமாரசாமியும் பதிலளிக்க வேண்டும் என கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்