அமைச்சரின் கார் மீது மோதி இளைஞர் உயிரிழந்தார்

x

பெங்களூருவில் மத்திய அமைச்சரின் கார் மீது மோதி இளைஞர் உயிரிழந்தார். மத்திய அமைச்சர் சோபா கரந்தலாஜே கே.ஆர் புரம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, அவரது கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த சாலையில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, கார் ஓட்டுநர் கவனக்குறைவுடன் கதவை திறந்ததால் இளைஞர் நிலை தடுமாறி விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த பேருந்து ஏறி இறங்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக அமைச்சரின் கார் ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்