தமிழக வாகனங்கள் முன் சாலையில் படுத்த கன்னட அமைப்பினர் - எல்லையில் நீடிக்கும் பதற்றம்

x

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதை கண்டித்து, ஓசூர் அருகே, கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில், கர்நாடக ரக்‌ஷண வேதிகா அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களின் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு நிலவியது. அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வாகனங்களில் ஏற்றி கைது செய்தனர்.முன்னதாக அத்திப்பள்ளியில் இருந்து பட்டை நாமம் அடித்தும், தலையில் கற்களை சுமந்து கொண்டும், காலிக்குடங்களுடன் கன்னட அமைப்பினர் ஊர்வலமாக வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்