கூரியரில் வந்த கஞ்சா... அதிர்ச்சியில் உறைந்த குற்றப்பிரிவு போலீஸ்

x

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உளிமாவு பகுதியில் உள்ள வீட்டில் சோதனையிட்ட போது, கூரியரில் வந்த பார்சலில் இருந்து, 6 லட்ச ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஜார்க்கண்டை சேர்ந்த ரிஷிகேஷ் என்பவரை கைது செய்த போலீசார், அதித் சர்வோத் என்பவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்