மக்களின் அடிப்படை உரிமைகளை பறித்த ஜம்மு-காஷ்மீர்.. தலைமை நீதிபதி காட்டம் | Jammu Kashmir

x

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டம் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் மீதான விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீர் வாசிகளுக்கு சிறப்பு உரிமைகளை அளித்த அரசமைப்பு சாசனம் 35 ஏ பிரிவு, அரசு வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம உரிமை, அசையா சொத்துக்களை வாங்கும் உரிமை, இந்தியாவில் எங்கும் வசிக்கும் உரிமை ஆகிய 3 அடிப்படை உரிமைகளை நடைமுறையில் பறித்துக் கொண்டதாக கருத்து தெரிவித்தார். அப்போது, அரசமைப்பு சாசனம் 35 ஏ பிரிவு ரத்து செய்த பிறகு ஜம்மு-காஷ்மீரில் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும், இதுவரை 16 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்தார். 12-வது நாள் விசாரணை இன்று நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்