பதற்றத்தில் இஸ்ரேல் போர்.. திடீரென இந்தியா மீது பயங்கர தாக்குதல் -நடத்திய பாகிஸ்தானுக்கு விழுந்த அடி

x

ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்றிரவு பாகிஸ்தான் படையினர், இந்திய நிலைகள் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய வகை பீரங்கிகளை பயன்படுத்தி, எல்லையில் உள்ள நிலைகள் மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜம்மு அர்னியா பகுதியில் சில தோட்டாக்கள் விழுந்ததோடு, ரஜ்னி தேவி என்ற பெண்மணி காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் மீண்டும் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த பசவராஜ் என்று வீரருக்கு இரண்டு கைகளிலும் சிறிய காயம் ஏற்பட்டதாகவும் எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்