இந்திய தேசத்திற்காக போராட கனவு கண்ட இளைஞர் எடுத்த விபரீத முடிவு

x

கர்நாடகாவில், ராணுவ தேர்வில் தோல்வியடைந்த இளைஞர் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிருங்கேரி தாலுக்காவை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர், கடந்த 2 ஆண்டுகளாக ராணுவத்தில் சேருவதற்காக முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சமீபத்தில் எழுதிய தேர்வில் தேர்வில் தோல்வி கார்த்திக் அடைந்தார். அதனை வீட்டில் கூற அச்சப்பட்ட நிலையில், விரக்தியில் இளைஞர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்