அயன் பட பாணியில் சம்பவம்..கொத்தாக சிக்கிய ரூ.26.8 கோடி..கதிகலங்கி போன டெல்லி ஏர்போர்ட்

x

எத்தியோப்பியாவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம், பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக, சுங்கத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அடிஸ் அபாபா நகரில் இருந்து டெல்லிக்கு வந்த, தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நபரிடம், அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சுமார் 26 கோடியே 8 லட்ச ரூபாய் மதிப்பிலான, ஆயிரத்து 789 கிராம் போதைப்பொருட்களை கைப்பற்றினர். தொடர்ந்து அந்த நபரை கைது செய்த அதிகாரிகள், பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்