சபரிமலையில் அபிஷேக நெய் முறைகேடாக விற்பனை

x

சபரிமலையில் அபிஷேக நெய் முறைகேடாக விற்பனை

#sabarimalai #ghee #kerala #thanthitv

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், நெய் அபிஷேகம் செய்வதற்காக நெய் வழங்கப்படுகிறது. அந்த நெய்யை, கிர்சாந்திகள் எனப்படும் பணியாளர்கள், முறைகேடாக பணம் பெற்று பக்தர்களுக்கு கொடுப்பதாக தேவசம்போர்டு லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் ரகசியமாக கண்காணித்தபோது, திருமூழிக்குளம் கோவிலைச் சேர்ந்த மனோஜ் என்பவர்தான் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடமிருந்து 14 ஆயிரத்து 565 ரூபாயை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை பம்பை போலீசில் ஒப்படைத்தனர். கைதான மனோஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்