"நல்லா படிக்கணும்னா பூஜை பண்ணனும்" - சாமியாரை நம்பிய பெற்றோர்.. - 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

x

கேரளாவில் பள்ளி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் கண்ணூர் அருகே, ஜெயேஷ் என்பவர் மாணவர்களுக்காக மந்திரம் மற்றும் பூஜைகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை, நன்றாக படிக்க வைக்க மந்திரம் செய்ய வேண்டும் என பெற்றோரிடம் கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பிய பெற்றோர், மாணவியை தினமும் மாலை ஜெயேஷிடம் அனுப்பி வைத்தனர். சில நாட்கள் கழித்து, ஜெயேஷ் பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மாணவி ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆசிரியர் அளித்த புகாரின் பேரில், போலி மந்திரவாதி ஜெயேஷை, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்