திருநங்கையாக மாறினால் திருமணம்.... ஆசையை நிறைவேற்றிய காதலனுக்கு கல்தா...

x

ஓரினக்காதலனுக்காக பம்பாய்க்கு சென்று ஆப்ரேஷன் செய்து பெண்ணாக மாற பணம் சேர்க்கும் சத்தாரின் காதல் கதையை பாவக்கதைகள திரைப்படத்தில் பார்த்திருப்போம்.

இந்த காட்சிகளின் கருவை கலைக்காமல், தனது ஆருயிர் காதலனை அடைய திருநங்கையாக மாறி ஏமாந்து நிற்கும் நிஜ சத்தார் தான் இவர் .

முகத்தை மூடிக்கொண்டு கண்ணீரும் கம்மலையுமாய் தனக்கு நேர்ந்த கொடுமைக்கு நியாயம் கேட்டு நிற்கும் இவரின் பெயர் பிரம்மராம்பா என்னும் பவன்.

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர். 27 வயதாகிறது. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பி.எட் சேர்ந்திருக்கிறார்.

அங்கு தான் சக மாணவரான நாகேஷ்வரராவ் என்பவருடன் பவனுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.பொதுவாக பருவ வயதினரிடையே உருவாகும் காதல் ஆசை, பவனுக்கும் ஊற்றெடுத்திருக்கிறது.

ஆனால் அந்த காதல் ஒரு பெண்ணுடன் அல்ல...சக மாணவனான நாகேஷ்வராராவின் மீது வந்துள்ளது. ஆம்....இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள். இதனால் இருவரும் கல்லூரியிலேயே காதல் வளர்த்து வந்துள்ளனர்.

அந்த காதல் படித்து முடித்த பின்னும், தொடர்ந்திருகிறது. இருவரும் ஒன்றாக சேர்ந்து கிருஷ்ணலங்காவில் ஒரு டியூஷன் சென்டரை நடத்தி வந்துள்ளனர்.

டியூஷன் சொல்லித்தரும் நேரம் போக மற்ற நேரத்தில் ஊரைச்சுற்றுவது, உல்லாசமாக இருப்பது என காதலில் மூழ்கி திளைத்துள்ளனர். இந்த சந்தோஷத்தை வாழ் நாள் முழுவதும் தொடர நினைத்த பவன், காதலனை திருமணம் செய்து கொள்ள அழைத்திருக்கிறார்.

ஆனால் ஓரினச்சேர்க்கை, நாகேஷ்வரராவுக்கு ஒரு கட்டத்தில் போரடித்து போயிருக்கிறது. இதனால் பவனை திரு நங்கையாக மாறினால் திருமணம் செய்து கொள்வதாக கண்டிஷன் போட்டிருக்கிறார் நாகேஷ்வரராவ்.

காதலனுக்காக தனது அடையாளத்தையே மாற்றிக்கொள்ள நினைத்த பவன், தனது சொத்தை விற்று 11 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்.

அந்த பணத்துடன் அடுத்த டிரைனிலேயே டெல்லிக்கு சென்று ஆப்ரேஷன் செய்து திருநங்கையாக மாறி இருக்கிறார். பவன் என்ற தனது பெயரையும் பிரம்மராம்பா என மாற்றி கொண்டுள்ளார்.

பெண் தோற்றத்தில் ஆசை ஆசையாக ஊருக்கு வந்த பிரம்மராம்பாவுக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி. செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு தலைமறைவாகி இருக்கிறார் நாகேஷ்வராராவ். பல வழிகளில் முயற்சித்தும் பிரம்மராம்பாவால் காதலனை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரம்மராம்பா உடனே விஜயவாடா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், காதலன் நாகேந்திரராவை வலைவீசி தேடி வருகின்றனர்.

சிகிச்சைக்கான பணத்தையும், நகேஷ்வராராவுக்கு தண்டனையும் கிடைக்க வேண்டும் என்பதே பவனின் கோரிக்கையாக உள்ளது,.


Next Story

மேலும் செய்திகள்