பெட்ரோல் பங்க் ஓனரை ஓட ஓட புரட்டி எடுத்த கும்பல் - பதறவைக்கும் வீடியோ காட்சி

x

கேரள மாநிலம் பாலக்காடு அருகே, பெட்ரோல் பங்கிற்குள் புகுந்து உரிமையாளரையும், ஊழியரையும் கும்பல் ஒன்று தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இடக்குறிச்சி பகுதியில் ஆதர்ஷ் குரியன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் முன்பு, வாகனங்கள் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில், கும்பல் ஒன்று, ஆதர்ஷ் குரியன் மற்றும் அவரது ஊழியரை தாக்கியுள்ளனர். இதுதொடர்பான புகாரின் பேரில், 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தாக்குதல் நடந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்