பிரபல நடிகை பலாத்கார வழக்குபிரபல நடிகருக்கு ஷாக் கொடுத்த ஐகோர்ட்

x

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில், விசாரணையை தள்ளிவைக்கக் கோரிய நடிகர் திலீப்பின் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பிரபல மலையாள நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கு எர்ணாகுளம் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்தபோது, குற்றத்தில் ஈடுபட்ட கும்பல் அதை செல்போனில் பதிவு செய்தது. பின்னர், இந்த வழக்கில் கைதான பல்சர் சுனில் என்பவரிடமிருந்து, பாலியல் துன்புறுத்தல் காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை போலீசார் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அந்தக் காட்சிகளை நீதிமன்றத்தில் யாரோ ஒருவர் செல்போனில் போட்டு பார்த்ததாகவும், அதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும், நடிகை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த விசாரணையை தள்ளிவைக்கக் கோரி நடிகர் திலீப் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக்கு திலீப் ஏன் அச்சப்பட வேண்டும் எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்