கனமழை எச்சரிக்கை... - மலை ரயில் சேவை ரத்து | Rain | Train Cancelled | ThanthiTV

x

கனமழை எச்சரிக்கையால் உதகை மலை ரயில் சேவை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் மேட்டுப்பாளையம் - உதகை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டதால், கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் மலை ரயில் சேவையை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. இந்த சூழலில், நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகிற 13ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்