சபரிமலை பக்தர்களின் பஸ்ஸை கவிழ்த்த கனமழை..! எருமேலி மலையில் பயங்கரம்

x

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள், பேருந்து மூலம் சபரிமலைக்கு புறப்பட்டனர். எருமேலி அருகே பேருந்து வந்த போது, கனமழை, அடர் மேகமூட்டம் நிலவி உள்ளது. இதன் காரணமாக வளையில் திரும்ப முயன்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. பேருந்தில் பயணம் மேற்கொண்ட 43 பேரில் 20 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீஸ் மற்றும் தீயணப்பு துறையினர், காயம் அடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எருமேலி பகுதியில் மோசமான வானிலை நிலவுவதால் பக்தர்கள் கவனத்துடன் செல்ல, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்