`மேகவெடிப்பு' போல் புரட்டியெடுத்த கனமழை... 20 பேர் பலி... தத்தளிக்கும் குஜராத்

x

குஜராத் மாநிலத்தில், பருவம் தவறி பெய்த மழையால் 20 பேர் உயிரிழந்தனர். கடந்த 2 நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால், பல பகுதிகளில் பயிர்கள், சேமிப்பு கிடங்குகளில் இருந்த தானியங்கள் சேதம் அடைந்தன. மேலும் 20 பேர் உயிரிழந்த நிலையில், 40க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகின. இதனிடையே மோசமான வானிலை காரணமாக, சூரத் விமான நிலையத்தில் 10 விமானங்களின் சேவை தாமதமானது. வானிலை ஆய்வு மையம் அளித்த தரவுகளின்படி, சுரேந்திர நகரில் 111 மில்லி மீட்டர் மழையும், சூரத்தில் 99 மில்லி மீட்டர் மழையும் ஒரே நாளில் கொட்டித் தீர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்