14 பேரை பலி கொண்ட கோரம்..ரயில்வே நிர்வாகம் அதிரடி முடிவு

x

விஜயநகரம் அருகே கண்டகப்பள்ளி என்ற இடத்தில் 2 ரயில்கள் மோதி விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 50 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் சிக்கிய ரயில் பெட்டிகளை அகற்றிய ரயில்வே ஊழியர்கள், ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் பின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதில், ரயில் பாதை போக்குவரத்துக்கு தகுதியுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள மூன்று பாதைகளிலும் ரயில் போக்குவரத்து துவங்கியது.


Next Story

மேலும் செய்திகள்