"பெட்ரோலுக்கு குட் bye" வந்திருச்சு ஹைட்ரஜன் பஸ்

x

இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்தை, டெல்லியில், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட வழித்தடங்களில் பசுமை ஹைட்ரஜனால் இயக்கப்படும் 15 எரிபொருள் செல் பேருந்துகளை இயக்கி சோதனை மேற்கொள்வதற்கான திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 2 எரிபொருள் செல் பேருந்துகளை டெல்லி கர்தவ்ய பாதையில் இருந்து, அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்