குளியல் துண்டுகளில் தங்கம்... சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

x

கேரளாவில் புதிய முறையில் தங்கம் கடத்திய நபரால் சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொச்சி விமான நிலையத்தில், ஃபஹத் என்பவரின் உடைமைகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர்.

அப்போது அவர் தங்கத்தை திரவமாக மாற்றி, குளியல் துண்டில் நனைத்து எடுத்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட 5 குளியல் துண்டுகளில் உள்ள தங்கத்தின் அளவை கண்டுபிடிக்க, இன்னும் சில நாட்கள் ஆகும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தங்கத்தை கடத்தி செல்ல புதுப்புது வழிமுறைகள் கையாளப்படுவதால், சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். '


Next Story

மேலும் செய்திகள்