நடனம் ஆடும் போதே சிறுவன் உயிரை பறித்த `கர்பா' |

x

குஜராத்தில், நவராத்திரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற கர்பா நடனத்தின்போது 17 வயது சிறுவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் கெடா மாவட்டத்தில், நவராத்திரி விழாவை முன்னிட்டு கர்பா நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று உற்சாகத்துடன் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது, வீர்ஷா என்ற 17 வயது சிறுவன், திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குஜராத்தில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கர்பா நடனத்தில் 10 பேர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் சிறுவர்கள் முதல் நடுத்தர வயதுடையவர்கள் என்றும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்