முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாள் - கார்கே, சோனியா மலர்தூவி மரியாதை

x

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியிலுள்ள நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள், குழந்தைகள் தினமாக ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. டெல்லியிலுள்ள நினைவிடத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக்குழு தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்