விமானத்தில் பைலட்டுக்கு விழுந்த அறை.. டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு

x

டெல்லியில், விமானம் புறப்பட தாமதமானதால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர், விமானியை தாக்கிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து பயணிகளுடன் கோவா புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானம், கடும் பனிமூட்டம் காரணமாக தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சஹில் கட்டாரியா என்ற பயணி, விமானியை சரமாரியாக தாக்கினார். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பயணி, பின்னர் விமானியிடம் மன்னிப்பு கோரினார். எனினும் பயணி மீது புகாரளிக்கப்பட்டு வழக்கு பதியப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்