குலை நடுங்க வைத்த பட்டாசு விபத்து... சித்தராமையா சொன்ன முக்கிய தகவல்

x

அத்திப்பள்ளியில் பட்டாசு கடை வெடி விபத்து வழக்கு விசாரணை, குற்ற புலனாய்த்துறைக்கு மாற்ற உள்ளதாக, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இந்த வெடி விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்தனர். கடை உரிமையாளர் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர், நேரில் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, விசாரணையை குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்ற இருப்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்