"எனக்கு உன் பொண்ண தரமாட்டியா..?" பெண் தராத ஆத்திரத்தில்... "வொர்ஸ்ட் அசோக்" செய்த கொடுமை

x

திருமணம் செய்து கொள்ள பெண் கொடுக்காத ஆத்திரத்தில் விவசாய பயிர்களை இளைஞர் சேதப்படுத்திய சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

மைசூர் ஹன்சூரு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பாக்கு செடிகளை இரவோடு இரவாக மர்ம நபர்கள் சேதப்படுத்தி இருந்தனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த அசோக் என்பவர் பயிர்களை சேதப்படுத்தியது கண்டறியப்பட்டது. வெங்கடேசனிடம் அவரது மகளைத் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெண் கேட்டுள்ளார் அசோக்... ஆனால், அசோக்கிற்குத் தவறான பழக்க வழக்கங்கள் இருப்பதாகக் கூறி பெண் தர வெங்கடேசன் மறுத்ததாகக் கூறப்படுகிறது. ஆத்திரத்தில் அசோக் வெங்கடேசனின் 1 ஏக்கர் பாக்கு செடிகளை வெட்டி வீசியுள்ளார்... இச்சம்பவம் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன் வெங்கடேசன் தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த இஞ்சி பயிர்களும் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. அதையும் அசோக் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. போலீசிடம் சிக்காமல் இருக்க தலைமறைவாகியுள்ள அசோக்கை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்