திரிபுராவில் ராணுவ வலிமையை காட்டிய மின்னொளி கண்காட்சி..

x

திரிபுரா மாநிலம் அகர்தாலாவில் சுத‌ந்திர தினத்தை காட்சிப்படுத்தும் வகையில், லேசர் மின்னொளி கண்காட்சி நடத்தப்பட்டது.

அகர்தாலாவில் உள்ள உயர்நீதிமன்ற வளாகம், மத்திய மற்றும் மாநில அரசு கட்ட‌டங்கள் மூவர்ண நிறத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

அங்கு வைக்கப்பட்டிருந்த பெரிய திரையில், லேசர் மின்னொளி கண்காட்சி நடத்தப்பட்டது.

இந்திய ராணுவத்தின் வலிமையை போற்றும் வகையில், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், பாராசூட் வீர‌ர்கள் வானில் இருந்து குதித்து தேசியக்கொடியை ஏந்துவது போன்று, மின்னொளியில் காட்சிப்படுத்தியது கண்களுக்கு விருந்தாக அமைந்த‌து.


Next Story

மேலும் செய்திகள்