"ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து.." - காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

x

கடற்கரை சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் சாலை விதிகளை மீறி தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 46 ஆயிரம் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், 26 ஆயிரம் பேரின் ஓட்டுநர் உரிமத்தை இடைநீக்கம் செய்ய போக்குவரத்துத் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் மீண்டும் அவர்கள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்த அவர் சாலை விபத்தில் உயிரிழப்புகளைத் தடுக்க வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்