"ஐபோன் வேணுமா".. ஒரே கேள்வியில் சிக்கிய மாஃபியா - போன் கடையும்.. பகீர் பின்னணியும்.

x

புதுச்சேரி அண்ணாசாலையில் இயங்கி வரும் செல்போன் விற்பனை செய்யும் கடைக்கு வந்த இரண்டு இளைஞர்கள், 1 லட்ச ரூபாய் மதிப்பிலான ஐபோன்களை குறைவான விலைக்கு தருவதாக தெரிவித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த கடைக்காரர், ஒருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இந்நிலையில், தப்பியோடியவரை போலீசார் தேடி வந்த நிலையில், கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த முகமது ஷீஹைப்பு என்பவரை கைது செய்தனர். அவர், கொடுத்த தகவலின் பேரில், மேலும், 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 5 லட்சம் மதிப்புள்ள 10 போலி ஐபோன்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், போலி ஐபோன்கள் தயாரிக்கும் கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்