மீண்டும் பதற்றத்தில் டெல்லி தீவிரமான கண்காணிப்பு

x

கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா விவசாயிகள் இன்று டெல்லி நோக்கி பேரணியை மீண்டும் தொடங்க உள்ளனர். இது தொடர்பாக ஷம்பு எல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தஜ்வீர் சிங், நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் வர உள்ளதாக கூறினார். டெல்லி ஜந்தர் மந்தர் நோக்கி அவர்கள் அமைதி பேரணி நடத்த உள்ளதாக தெரிவித்த அவர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களில் விவசாயிகள் தயார் நிலையில் இருப்பதாக கூறினார். விவசாயிகள் பேரணி இன்று நடைபெற உள்ளதால், டெல்லி எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்