ஆளையே மூழ்கடிக்கும் கடன்.. ஆசை குழந்தைகள் கழுத்தை நெரித்த பெற்றோர்.. கர்நாடகத்தில் அதிர்ச்சி

x

கர்நாடக மாநிலம் தும்கூரில் கடன் தொல்லையால் விரக்தியடைந்த தம்பதி தங்கள் 3 குழந்தைகளைக் கொன்றதுடன் தாங்களும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

சதா சிவம் நகரைச் சேர்ந்த 32 வயதான கரீப் சாப் கபாப் கடை நடத்தி வந்துள்ளார்... இவரது மனைவி சுமையா... இத்தம்பதிக்கு 14 வயதில் ஹாஜிரா என்ற மகளும், முகமது சுபான், முகமது முனீர் என்ற 2 மகன்களும் உள்ளனர்... கடை வருமானம் குடும்ப செலவு மற்றும் குழந்தைகளின் கல்வி செலவுக்கு போதுமாக இல்லாத நிலையில், பலரிடம் 1 லட்ச ரூபாய்க்கு மேல் கரீப் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது... கரீப் குடியிருந்த வாடகை வீட்டின் உரிமையாளர் கலந்தர் என்பவரும் கரீப்பிற்கு அதிக வட்டிக்கு கடன் தந்ததாகக் கூறப்படுகிறது... கலந்தர் கடனைத் திருப்பிக் கேட்டதுடன், கரீப் குடும்பத்திற்கு கடும் தொல்லை தந்த நிலையில், மனமுடைந்த கரீப்பும், சுமையாவும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்... ஆசை ஆசையாய்ப் பெற்றெடுத்து தங்கள் கைகளால் தூக்கிக் கொஞ்சிய பெண் பிள்ளையையும், இரு ஆண் பிள்ளைகளையும், அதே கைகளால் கழுத்தை நெறித்து கண்ணீர் மல்க கொலை செய்ததுடன், தாங்களும் வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்... தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கரீப் கைப்பட எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தையும், அவர் பதிவு செய்திருந்த வீடியோவையும் கைப்பற்றினர்..


Next Story

மேலும் செய்திகள்