பிபர்ஜாய் புயலால் சேதம்..குஜராத்துக்கு ரூ.338.24 கோடி நிதி | India | Gujarat

x

பிபர்ஜாய் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திற்கு 338.24 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய அரசும், மாநில அரசும் முன்னேற்பாடுகளைச் செய்ததால் பேரிடரின்போது உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புயல் பாதிப்புக்குப் பிறகு மாநில அரசின் அறிக்கைக்கு காத்திருக்காமல், சேதங்களை மதிப்பிடுவதற்கு மத்திய குழுவை நியமித்த உள்துறை அமைச்சகம், ஏற்கனவே முதல் தவணையாக 584 கோடி ரூயாயை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்