அரசியல்வாதிகளை நடு நடுங்க வைக்கும் - தேர்தல் ஆணையத்தின் C-Vigil செயலி

x

தேர்தல் ஆணையத்தின் C-Vigil செயலி வாக்காளர்களிடையே சென்றடைந்து வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள‌ அறிக்கையில், 79 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 99 விழுக்காட்டுக்கும் மேல் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 89 விழுக்காடு புகார்கள் 100 நிமிடங்களுக்குள் தீர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 58 ஆயிரத்து 500 புகார்கள் பதுக்கல்கள் குறித்தும், பரிசுப்பொருட்கள் தொடர்பாக ஆயிரத்து 400 புகார்களும், மிரட்டியதாக 535 புகார்களும் வந்துள்ளன. அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பிரச்சாரம் செய்த‌தாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்