மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா... மரண பீதியை கிளப்பும் JN 1... தமிழகத்தில் நிலை என்ன..?

x
  • புதிதாக பரவும் ஜே.என் 1 வகை கொரோனாவால், தமிழகத்தில் 4 பேர் உள்பட நாடு முழுவதும் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • இந்தியா உட்பட40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது பரவி வருகிறது. இந்த வகை கொரோனாவால் நாடு முழுவதும் 63 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • கோவாவில் 34 பேரும், மகாராஷ்டிராவில் 9 பேரும், கர்நாடகாவில் எட்டு பேரும், கேரளாவில் ஆறு பேரும், தமிழகத்தில் 4 பேரும், தெலங்கானாவில் இரண்டு பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குளிர் மற்றும் பண்டிகை காலம் என்பதால் மக்கள், பொதுஇடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது

Next Story

மேலும் செய்திகள்