பணியின் போது இடிந்து விழுந்த சுவர் -பணியாளர்களுக்கு வந்த சோகம்

x

உத்தரப்பிரதேசத்தில் கட்டிடப் பணியின்போது திடீரென சுவர் இடிந்து விழுந்து ஏராளமான தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய கட்​டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதியில் சுவர் இடிந்ததில் அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த குடிசைகள் சேதமடைந்தன. இதில் காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மண்ணில் மேலும் சிலர் புதைந்திருக்கலாம் என கருதப்படும் நிலையில், மாநில பேரிடர் மீட்புக்குழுவினர், மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்