பொம்மை ரூபாய் நோட்டுகளால் கிறிஸ்துமஸ் குடில்..டிஜிட்டல் பண மோசடி குறித்து விழிப்புணர்வு

x

புதுச்சேரியில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை வரவேற்கும் வகையிலும், பாதுகாப்புடன் அதனை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டுள்ளது. அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ஓவிய ஆசிரியரான சுந்தரராசு தனது வீட்டில் வித்தியாசமான முறையில், பொம்மை ரூபாய் நோட்டுகளை கொண்டு கிறிஸ்துமஸ் குடில் அமைத்து அசத்தியுள்ளார். அதில், மோசடிகள் குறித்து புகார் தெரிவிக்கும் 1930 என்ற எண் மற்றும் மின் அஞ்சல் முகவரியையும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்