நொடியில் கலைந்த கனவு... வீட்டின் முன்னே சரிந்த சிறுவன் உயிர் - "அவ்வளவு தான் சார் வாழ்க்கை.."

x

குஜராத்தின் துவாரகாவில், 12 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துவாராகவின் விஜாப்பூரில் வசித்து வந்த 12 வயது சிறுவன், அதிகாலை வீட்டு முற்றத்தில் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். சிறுவனை உடனடியாக மீட்டு அவனது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவன் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவன் கொரோனா தடுப்பூசி செலுத்தாததாக கூறப்படும் நிலையில், 12 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்தது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதேபோல், ராஜ்கோட்டில் 20 வயது மதிக்கத்தக்க 2 இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழந்த தகவலும் வெளியாகியுள்ளது. இளம் தலைமுறையினர் மாரடைப்பால் உயிரிழப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்