வாயால் கடித்தவுடன் பறிபோன குழந்தை - பெற்றோரின் கவனக்குறைவுக்கு விலை உயிர்..!

x

உத்தர கன்னட மாவட்டம் சித்தாரா பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் மின்சார வாரியத்தில் குத்தகை அடிப்படையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி சஞ்சனா ஆவார் இத்தம்பதிக்கு 8 மாத பெண் குழந்தை இருந்தது. நேற்று சஞ்சனா குழந்தையை ஹாலில் கீழே படுக்கவைத்து விட்டு சமையல் செய்து கொண்டிருந்தார். தூங்கிக் கொண்டிருந்த குழந்தை சாணித்யா எழுந்தவுடன், தாய் சமையலறையில் இருப்பதை பார்த்து தவழ்ந்து தவழ்ந்து சமையல் அறையை நோக்கி வந்துள்ளது. வழியில் மொபைல் சார்ஜரில் வயர் கீழே தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த குழந்தை அதை வாயில் வைத்துக் கடித்துள்ளது. மின்சாரம் தாக்கிய நிலையில், சஞ்சனா பதறியடித்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக சோக செய்தியைக் கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்