திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் கம்பெனி பேருந்து - 12 ஊழியர்கள் பலி.. அதிர்ச்சி காட்சி

x

சத்தீஸ்கரில் தனியார் நிறுவன பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த‌தில், அந்த நிறுவன ஊழியர்கள் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் ராய்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை சத்தீஸ்கர் துணை முதலமைச்சர் விஜய் சர்மா சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், படுகாயமடைந்தோர் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்