ஜெகன்மோகன் தொண்டர்களை ஓட ஓட விரட்டிய சந்திரபாபு நாயுடு தொண்டர்கள்.. ஆந்திராவில் பரபரப்பு

x

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் தெலுங்கு தேச கட்சியினருக்கும், ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வருகையையொட்டி தெலுங்கு தேச கட்சி தொண்டர்கள் திரண்டிருந்தனர். அப்போது ஒய். எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கட்சி கொடியை ஏந்தியபடி பூங்கொத்து வாங்க காரில் வந்ததாகவும், அவர்களை தெலுங்கு தேச கட்சியினர் தடுத்து நிறுத்தி தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து அனைவரையும் விரட்டியடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்