மீசையை முறுக்கி தொடையை தட்டி சவால் விட்ட பாலகிருஷ்ணா..ஒரே வார்த்தையில் Off செய்த அமைச்சர்..

x

ஆந்திர மாநிலத்தின் சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து, சபாநாயகரை முற்றுகையிட்டு கோஷம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வும், நடிகருமான பாலகிருஷ்ணா, தன்னுடைய மீசையை முறுக்கி தொடையை தட்டி ஆளுங்கட்சி உறுப்பினர்களை நோக்கி சவால் என்று கூறினார். அவருடைய செயலுக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பேசிய ஆந்திர நீர் மேலாண்மை துறை அமைச்சர் அம்பத்தி ராம்பாபு, இது சினிமா அல்ல.... சட்டமன்றம் என்பதை புரிந்துகொண்டு பாலகிருஷ்ணா நடந்துகொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்