எஜமானை தாக்க வந்த நாகம் - தடுத்து நிறுத்திய வளர்ப்பு பூனை "...என்னை தாண்டி போடா பாக்கலாம்"

x

உணவகத்திற்குள் நுழைய முயன்ற நாகப் பாம்பை வளர்ப்புப் பூனை விரட்டியடித்த அதிசயம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது... கொப்பல் மாவட்டம் பசாப்பூர் கிராமத்தில் பச்சைப் பசேல் என வயல்வெளிகளுக்கு நடுவே உணவகம் ஒன்று அமைந்துள்ளது. அதன் உரிமையாளர் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். திடீரென அந்த உணவகத்தினுள் பாம்பு ஒன்று நுழைய முயன்ற நிலையில், முட்டுக் கட்டையாய் நின்றது அந்தப் பூனை... இதனால் பாம்பு படமெடுத்து கோபத்துடன் சீறிய நிலையில், அந்த வளர்ப்புப் பூனையோ வீரம் அஜித் பாணியில் "என் ஆள தொடனும்னா என்னைத் தாண்டி தொடுடா பார்க்கலாம்" என்பது போல் அரணாகக் காத்து நின்றது. பாம்பு என்ற பயம் கொஞ்சமும் இல்லாமல் அசராமல் பூனை மல்லுக்கட்டிய நிலையில், சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு அந்தப் பாம்பு சோர்வடைந்து காட்டுக்கே திரும்பியது.


Next Story

மேலும் செய்திகள்