சாலையில் கவிழ்ந்த சரக்கு லாரி... நூலிழையில் உயிர் தப்பிய மக்கள் - அதிர்ச்சி காட்சிகள்

x

கேரளாவில் கோழித்தீவனம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். பாலக்காடு மாவட்டத்திற்கு உட்பட்ட இராட்டியல் பகுதியில், கோழித் தீவனம் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி, சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மீது மோதியதில், லாரி டிரைவர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். மூவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அளவுக்கு அதிகமான பாரம் காரணமாக விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்