அதிவேகத்தில் பாய்ந்து... ரோட்டோர வீட்டுக்குள் சொருகிய கார்... பக் பக் காட்சி
கேரளாவில் மலை இறக்கத்தில் வந்து கொண்டிருந்த கார் ஒன்று, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சலையோர பள்ளத்தில் இருந்த வீட்டின் மீது விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோட்டயம், மேஸ்திரிபாடி அருகே நடந்த இந்த சம்பவத்தில், வீட்டின் தடுப்புச்சுவர் மற்றும் தண்ணீர் தொட்டியை உடைத்து கார் கவிழ்ந்தது. இதில் வீட்டிற்குள் இருந்த பள்ளிமாணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். காருக்குள் இருந்தவரும் சிறுகாயத்துடன் தப்பிய நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் காரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
Next Story