தாய், மகனை கொடூரமாக தாக்கிய கார் ஓட்டுநர் - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

x

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் தவறுதலாக வேறு வாகனத்தில் ஏறிய பெண் மற்றும் சிறுவனை கார் ஓட்டுனர் ஒருவர் தாக்கியுள்ளார். அனிதா அகர்வால் மற்றும் அவரது மகன் மருத்துவமனைக்கு செல்வதற்காக, காரில் ஏறி உள்ளனர். ஆனால் பதிவு செய்யப்பட்ட காரை விடுத்து வேறு காரில் ஏறியதால் ஆத்திரமடைந்த ஓட்டுனர், இருவரையும் தாக்கியுள்ளார். இது குறித்த சிசிடிவி கேமிரா பதிவுகளை கொண்டு உபேர் கார் ஓட்டுனரான பசவ ராஜூவை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்